இப்பள்ளியானது 1902 – ஆம் ஆண்டு July 15 ஆம் நாள் அருட்பணி. இன்னசென்ட் அடிகளார் அவர்களால் தொடக்கப்பள்ளியாக ஆரம்பிக்கப்பட்டது. 1952 – ஆம் ஆண்டு அருட்பணி ஞானப்பிரகாசம் அடிகளார் அவர்களின் பெருமுயற்சியால் நடுநிலைப்பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது. 1958 ஆம் ஆண்டு அருட்பணி. ஞானப்பிரகாசம் அடிகளார் அவர்களின் பெருமுயற்சியால் உயர்நிலைப்பள்ளியாகத் தரம் உயர்த்தப்பட்டது. 1978 – ஆம் ஆண்டு அருட்பணி. மார்ட்டின் S. அலங்காரம் அடிகளார் அவர்களின் முயற்சியாலும் பங்குமக்களின் பேராதரவினாலும் மேல்நிலைப்பள்ளியாகவும் தரம் உயர்ந்துள்ளது. பள்ளி துவங்கப்பட்டு 123 ஆண்டுகளாக மிகச்சிறப்பாக செயல்பட்டு வருகிறது என்பதனை பெரும் மகிழ்ச்சியோடு தெரியப்படுத்திக்கொள்கிறேன்.
பள்ளியானது குழித்துறை மறைமாவட்டத்திற்குட்பட்ட வாவறை புனித கார்மல் மலை அன்னை பங்கின்கீழ் செயல்பட்டு வருகிறது. குழித்துறை மறைமாவட்ட மேதகு ஆயர். ஆல்பர்ட் அனஸ்தாஸ் அவர்கள் மேலாளராகவும், அருட்பணி. டோமினிக் M கடாட்சதாஸ் அவர்கள் கூட்டாண்மை மேலாளராகவும், அருட்தந்தை. V சிறில் மெஸ்மின் அவர்கள் தாளாளராகவும் திருமதி. L. மேரி ஹெலன் அவர்கள் தலைமையாசிரியையாகவும் இருந்து மிகச்சிறப்பாக செயல்பட்டு வருகிறார்கள்.
Dummy vision statement for the school. Replace this content later with actual vision.
Dummy mission statement for the school. Replace this content later with actual mission.
"மாற்றத்தை உருவாக்குவது"